மெய்யடியார்களே! எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டியும் 2026 ம் ஆண்டு 9ம் நாள் மகோற்சவ நன் நாளிலே, 9ம் திருவிழா உபயகாரர்களினால் மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டுவிக்கப்பட்ட சித்திரத்தேரிலே ஆரோகணிப்பார்கள் என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகிறோம். அனைவரும் வருக!, சித்திரத்தேரில் திருவுலா வரும் அலங்காரக் காட்சியைக் காண்க. 21.06.2026 அன்று நடைபெறும் நடராஜபெருமானின் இரதோற்சவத்தை தரிசிற்பதற்கு அனைவரையும் வருக வருக வென அழைக்கின்றோம்.இறையன்புடன் 9ம் திருவிழா உபயகாரர்கள்
ஐப்பசி மாத சிவகாமி அம்பிகா மகோற்சவ விஞ்ஞாபனம் (05-11-25 — 14-11-25) சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டின் நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில், பண்டத்தரிப்பான்புலப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்பாள் உடனுறையும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அம்பாளின் வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம் ஐப்பசி மாதம் 19ம் நாள் (05-11.2025) புதன்கிழமை அச்சுவனி நட்சத்திரமும் பூரணை திதியும், சித்தமிர்த யோகமும் கூடிய முற்பகல் 10.00 மணிக்கு […]
குப்பாபிஷேகம் 2023-2 குப்பாபிஷேகம் 2023-3 குப்பாபிஷேகம் 2023-4 கும்பாபிஷேகம் 2023 -5 கும்பாபிஷேகம் 2023 – 6 கும்பாபிஷேகம் 2023 -7 கும்பாபிஷேகம் 2023 -8
அடியார்களே! தேர்த்திருவிழா உபயகாரர்கள் எம்பெருமாட்டி சிவகாமிக்கு எம்பெருமான் சிதம்பரஈஸ்வரருக்கும் சித்திரத்தேர் திருப்பணி செய்யும் செயற்திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள், இவ் அரிய பணிக்கு தங்களாலான உதவிகளை செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம் இவ்வண்ணம்தேர்த் திருவிழா உபயகாரர்கள்
அடியார்களே! இவ்வருட மகோற்சவம் பற்றிய கலந்துரையாடல் விபரம் விரைவில் அறியத்தரப்படும்.